Wednesday, 24 September 2014

தமிழர்களின் தோற்றம்



தமிழர்களின் தோற்றம்

தமிழர் தோற்றம் பற்றி இரு கருத்துகள் அல்லது கருதுகோள்கள் உள்ளன. பழந்தமிழர் தென் இந்தியாவின் ஆதிக்குடிகள் என்பது ஒரு கருதுகோள். தமிழர் மத்திய ஆசியா, வட இந்தியா நிலப்பரப்புகளில் இருந்து காலப்போக்கில் தென் இந்தியா வந்தனர் என்பது மற்றைய கருதுகோள். எப்படி இருப்பினும் தமிழர் இனம் தொன்மையான மக்கள் இனங்களில் ஒன்று.


தமிழர்களின் தோற்றம் மற்ற திராவிடர்களைப் போலவே இன்னும் தெளிவாக அறியப்படவில்லை. எனினும் அவர்கள் கி. மு. 6000-ஆம் ஆண்டு வாக்கில் இந்தியாவிற்கு வந்து இருக்கலாம் என்று தொல்லியல், மரபியல் ஆய்வுகள் கருதுகின்றன. (கேட்கில் 1997). பண்டைய ஈரானின் இலாமைட் மக்களுடன் தமிழர்கள் தொடர்பு கொண்டு இருந்ததாகக் கூறப் பட்டாலும் அதனை நிரூபிக்க வலுவான ஆதாரங்கள் இல்லை. சிந்து சமவெளி நாகரிக மக்கள் தமிழர்களா அல்லது திராவிடர்களா (உதா. பர்போலா 1974;

2003) என்னும் கருத்தும் சர்ச்சைக்கு உரியதாகவே இருக்கின்றது.தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பல பழங்காலத்துப் புதைபொருட்களின் சான்றுகள் கிடைத்து உள்ளன. குறிப்பாக ஆதிச்ச நல்லூரில் அகழ்ந்து எடுக்கப்பட்ட மண்பாண்டங்கள். இவை கி. மு. 1000-ஆம் ஆண்டு காலத்து மண்பாண்டங்கள் ஆகும். இவை தற்காலத் தமிழ்நாட்டில் தமிழர்கள் வாழ்ந்ததற்கானச் சான்றுகளாக விளங்குகின்றன.

அந்தப் புதைபொருட்களில் உள்ள குறிப்புகளும் பண்டைய தமிழ் இலக்கியங்களில் உள்ள குறிப்புகளும் ஒத்துப் போவதால், அக்கால கட்டத்தில் தென்னிந்தியாவில் தமிழர்கள் வாழ்ந்ததை இது உறுதி செய்கிறது. இந்த இடங்களில் மேற்கொள்ளப் பட்ட அகழ்வுகளில் கிடைத்த பழைய தமிழ் எழுத்துக்கள் குறைந்தது கி. மு. 500 ஆண்டுகள் பழமையானவை என்று தெரிய வருகிறது.

No comments: