தெரு குட்டைகள்.
இலை படுக்கைகளிலிருந்து உருண்டு விழும்
குட்டி மழைகள்.
பெருமழை சென்ற பின்னும் கையசைத்துக் கொண்டிருக்கும்
காலைத் தூரல்.
உறங்கியபின் விடியும் தீபாவளியென
இரவு மழை.
அடைந்த அறைகளின்
கண்ணாடி ஜன்னல்களை அறையும்
ஊமை மழை.
ஒதுங்கிய கடை வாசற் தெரு மேல்
மத்தாப்புகளென தெறிக்கும்
திடீர் மழை.
இப்போதே பெய்துவிடுவதுபோல
எப்போதும் கருத்திருக்கும் வானம்.
மீண்டும் மழைக்காலம்.
ஒரு முறையாவது
குடையின் அடியில்
நனைவேன் என நினைக்கிறேன்.
No comments:
Post a Comment